• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

மசால் வடை


தேவையானப் பொருட்கள்:

கடலைப்பருப்பு -‍‍ 2 கப்
பெரிய‌ வெங்காய‌ம் ‍‍‍- 1
ப‌ச்சைமிள‌காய் - 2 அல்ல‌து 3
காய்ந்த‌ மிள‌காய் - 1
இஞ்சி - ஒரு சிறுத்துண்டு
க‌றிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவ‌ல் - ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பத‌ற்கு

செய்முறை:

கடலைப்பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின் நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்து விடவும். அதிலிருந்து ஒரு கைப்பிடி பருப்பை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

மீதி பருப்புடன் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து ச‌ற்று கொர‌கொர‌ப்பாக‌ அரைத்துக் கொள்ள‌வும். அரைக்கும் பொழுது த‌ண்ணீர் சேர்க்க‌ தேவையில்லை.

வெங்காய‌ம், ப‌ச்சை மிள‌காய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகிய‌வ‌ற்றை பொடியாக‌ ந‌றுக்கிக் கொள்ள‌வும். இவை எல்லாவ‌ற்றையும் அரைத்த‌ ப‌ருப்புட‌ன் சேர்க்க‌வும். அத்துட‌ன் தேங்காய்த்துருவ‌லையும் சேர்த்து பிசைந்துக் கொள்ள‌வும்.

ஒரு வாண‌லியில் எண்ணையைக் காய‌ வைக்க‌வும். எண்ணை காய்ந்த‌ பின், எலுமிச்ச‌ம் ப‌ழ‌ அள‌வு மாவை எடுத்து உருட்டி, இட‌து உள்ள‌ங்கையில் வைத்து அத‌ன் மேல் வ‌ல‌து உள்ள‌ங்கையால் லேசாக‌ அழுத்த‌வும். அதை எடுத்து காய்ந்த‌ எண்ணையில் போட்டு பொன்னிற‌மாக‌ பொரித்தெடுக்க‌வும்.

க‌வ‌னிக்க‌: சோம்பு வாச‌னை பிடிக்க‌வில்லை என்றால், அதை த‌விர்த்து விட்டு, அத‌ற்குப் ப‌தில் சிறிது பெருங்காய‌த்தூளைச் சேர்த்து செய்ய‌லாம். விருப்ப‌மில்லையென்றால், தேங்காயையும் த‌விர்த்து விட‌லாம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...