• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பழப் பாயசம்


வெறும் பால், பழம் போன்றவற்றை சாப்பிடுவது என்றால், பலருக்கு அவ்வளவாக பிடிக்காது. ஆனால், இதையே சுவையாக சமைத்துக் கொடுத்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானப் பொருட்கள்:

பால் - 5 கப்
சர்க்கரை - 1 கப்
கஸ்டர்ட் பவுடர் - 2 டீஸ்பூன்
பழத்துண்டுகள் - 2 கப்
உலர்ந்த பழங்கள் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

1 கப் பாலில் கஸ்டர்ட் பவுடரை கரைத்துக் கொள்ளவும். மீதி 4 கப் பாலை நன்கு காய்ச்சவும். பால் நன்கு கொதிக்கும் பொழுது, தீயைக் குறைத்து விட்டு, கஸ்டர்ட் பவுடர் கலவையை அதில் ஊற்றவும். அத்துடன் சர்க்கரையை சேர்க்கவும். நன்கு கிளறி விட்டு, திரும்பவும் கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் கீழே இறக்கி வைத்து ஆற விடவும்.

ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு, பேரிக்காய் அல்லது தங்களுக்கு விருப்பமான பழங்களை, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஆறிய பாலையும், பழத்துண்டுகளையும், தனித்தனியாக, குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

பரிமாறுவதற்கு சற்று முன்னதாக, இரண்டையும் ஒன்றாக கலந்து, கண்ணாடி கிண்ணங்களில் ஊற்றிக் கொடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...